ரிஷாதினால் முடியும் என்றால் ஏன் ரவூப் ஹக்கீமினால் முடியாதா...?

Written By avathani Media Network on Monday, January 16, 2017

(ரிம்சி ஜலீல்)

அரசியல் என்பது பல்வேறு தரப்பட்டவர்களின் கருத்துக்கமைய இன்று வரை அது 
சாக்கடையாகவே பார்க்கப்படுகின்றது அது ஏன் என்று தெரியுமா..? 

வாக்குகளைப் 
பெற அரசியல்வாதிகள் போடுகின்ற நாடகமும் நடிக்கத் தெரியாதவர்களுக்கு 
சமூகத்தில் கொடுக்கின்ற அந்தஸ்தும் தான் இதற்க்கு மிக முக்கியமான காரணம்.

நடிக்கின்ற நடிகர்களுக்கே இந்தி
யா
வின் அரசியல் போன்று முன்னுரிமை 
கொடுக்கின்ற இந்தக் காலத்தில் இலங்கையிலும் நாம் அன்மைக்காலங்களில் 
படங்களில் நடிக்காவிட்டாலும் அரசியலில் நடிக்கின்ற நடிகர்கள் அதிகமாகிக் 
கொண்டே போகின்றார்கள் இது ஏன்..? தேசிய தலைவர்கள் என்று தம்மை தாமே 
பீத்திக் கொள்கின்ற இந்த அரசியல் வாதிகளின் உண்மை முகம் தான் என்ன..??

இன்று நாம் முக்கிய இரு முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பற்றித்தான் 
பார்க்கப் போகின்றோம் யார் அவர்கள் இன்று முஸ்லிம் சமூகம் அரசியல் 
ரீதியாகவும் சமூக ரீதீயாகவும் பலப்படுவதற்க்குக் காரணமாக இருந்த மாமனிதர் 
அஷ்ரப் அவர்களின் கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஸ்ரீலங்கா 
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹகீம் அவர்கள் அதே போன்று 
மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்களின் பெயரை வைத்துக் கொண்டு இன்று மக்கள் 
காங்ரஸ் என்ற பெயரில் அரசியல் செய்து கொண்டிருக்கும் ரிஷாத் பதியுதீன் 
அவர்களைப் பற்றியும் தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் என்னிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 
நண்பர் ஒருவர் கூறினார் எங்களுடைய தலைவரைப் பாருங்கள் அவர் வருகின்ற போது 
அவர்களின் முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புப் படையினர் செல்கின்றார்கள் 
பாருங்கள் உங்களுடைய தேசிய தலைவருக்கு என்ன நடந்தது என்று கின்டலாகக் 
கேட்டார்.

அப்போது தான் எனக்குத் தெரிந்தது இப்படியும் தலைவர்களை 
டைபோடும் 
மக்களும் இருக்கின்றார்கள் என்கின்ற செய்தியை நான் அறிந்து கொண்டேன் இதை 
எப்படி சொல்வது திருடர்களுக்குத்தான் பாதுகாப்புக் கொடுப்பார்கள் அவர்கள் 
தப்பிவிடக் கூடாது என்பதற்க்காக அதே கதைதான் இதுவும் இன்று ஊழலுக்குப் 
பெயர் போனவர் உங்களைடைய அமைச்சர் தானே நான் சொல்லவில்லை பெரும்பான்மை 
சமூகம் சொல்கின்றது அதனால் தான் என்னவோ இத்தனை பாதுகாப்பு சமூகத்தை 
பாதுகாக்க வேண்டிய தலைவர்களை சமூகம் பாதுகாக்க வேண்டுமா..?? என்று உமர் 
(ரலி) அவர்கள் உங்களுக்கு ஏன் பாதுகாப்பு இல்லை என்று கேட்ட போது கூறிய 
விடயம் எனக்கு நினைவுக்கு வருகின்றது.

அப்படித்தான் ஒரு நாள் என்னிடம் இன்னும் ஒரு நண்பர் கேட்டார் ரிஷாத் 
இன்று TV யில் விவாதம் செய்கின்றார் ஏன் உங்களுடைய அமைச்சருக்கு முடியாது 
என்றார் இதை எப்படி விளக்குவது நான் மேலே கூறியது போன்று சமூகம் 
நடிப்பவர்களைத்தான் அதிகம் விரும்புகின்றது என்பதற்க்கு இதுவும் ஒரு 
சிறந்த உதாரணமாகும்.

ஏன் நான் அப்படிச் சொன்னேன் என்றால் இன்று ரிஷாத் வில்பத்து என்கின்ற 
அந்த விடையத்தை தனது கைகளில் எடுக்கும் போது ஏதோ முழு முஸ்லிம் 
சமூகத்தின் பிரச்சினையை தனது கைகளில் எடுப்பது போன்று அதனை இந்த 
சமூகத்திடம் முன்வைக்கின்றார் அது எதற்க்காக என்பதை புறிந்து கொள்ளாத 
சமூகம் இவரை தூக்கித் தலையில் வைத்து கொண்டாடுகின்றது.

உண்மையில் வில்பத்து பிரச்சினை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரதும் 
பிரச்சினையா..? அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினது பிரச்சினையா என்று 
பார்த்தால் இது ஒரு சமூகத்தின் பிரச்சினை இதனை எப்படி கையாளுவது என்பது 
தெரியாமல் அவர் மீள்குடியேற்ற அமைச்சராகவும் இருந்திருக்கின்றார் இதைதான் 
தகுதியில்லாதவர்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்படுவது என்று நபியவர்கள் கூறியது 
போன்று இருக்கின்றது.

அதே போன்று தான் எங்களுடைய அமைச்சரின் பெயரில் பாடசாலைகள் கட்டிடங்கள் 
என்றெல்லாம் இருக்கின்றது ஏன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் 
ரவூப் ஹகீமின் பெயரில் இல்லை அவர் அபிவிருத்தி செய்யத் தெரியாதவரா..? 
இப்படி ஒரு கேள்வி இன்றைய சமூகத்தின் மத்தியில் சுற்றிவருகின்றது இது 
ஏன்..?

யாரும் வாழும் போது தமக்கு சமாதி கட்ட விரும்பமாட்டர்கள் அப்படித்தான் 
ரிஷாதின் செயற்படுகளும் இருக்கின்றன தான் வாழும் போது பிரரின் கண்களில் 
படுகின்றது போல அவருடைய பெயரில் சமாதிகளை உருவாக்கி வைத்திருக்கின்றார் 
மக்கள் எப்படிப் போனாலும் பரவாயில்லை அமைச்சரே வரலாறு முக்கியம் என்பது 
போன்று இருக்கின்றது நபியவர்கள் கூட விரும்பாத ஒரு செயலை இன்று இவர் 
செய்திருக்கின்றார் என்றால் இவைகள் எதற்க்காக தான் இறந்த பின்னர் 
அவர்களின் தொன்டர்கள் அவர்களை மறந்துவிடக்கூடாது என்பதற்க்காகவா..? 
அல்லது மறந்துவிடுவார்கள் என்ற பயத்திலா..??

உண்மையை சொல்லப் போனால் மக்களின் கட்டிடங்களில் வாழ்பவன் அல்ல தலைவன் 
மக்களின் உள்ளங்களில் வாழ்பவனே தலைவன் இதுதான் உண்மையும் நடிப்பும் 
நாடகமும் காலங்களினால் மறக்கடிக்கப்பட
லாம் 
 ஆனால் உண்மையான அரசியலும் 
சாணக்கியத்தனமும் எப்போதும் பேசப்படும்....
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.