பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் தொடர்பில் தீர்வு பெற்றுக்கொள்ள குழு நியமனம்

Written By avathani Media Network on Friday, August 12, 2016

பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் தொடர்பில் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அமைச்சரவையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் தீர்வுகள் எட்டப்படுமென போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எஸ்.சோமவீர குறிப்பிட்டார்.
இந்தக் குழுவில் தொழில் ஆணையாளர், பொலிஸார், திறைசேரி மற்றும் ரயில்வே பொது முகாயமையாளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ரயில் கடவைக் காப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு இந்த குழுவின் ஊடாக தீர்வு வழங்குவதற்கு எண்ணியுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.