(எம்.எஸ்.எம்.சாஹிர்)
சம்மாந்துறை பஸ்பெக் அமைப்பின் ஏற்பாட்டில் இம்மாதம் இறுதிப் பகுதியில் இடம்பெறவுள்ள “தேன் மழை" கலை, கலாசார, வர்த்தக விழாவின் ஓர் அங்கமான சிறந்த முன்பள்ளி பாடசாலைகளை கௌரவிப்பதற்கான “வித்ய ஒளி" கௌரவிப்புக்கான நேர்முகத் தேர்வு கடந்த (2016.05.14) சமாதான கற்கைகள் நிலையத்தில்> பஸ்பெக் அமைப்பின் பொதுச்செயலாளரும்> நவமணி பத்திரிகையின் ஆசிரியர் பீட உறுப்பினருமான கியாஸ் ஏ. புஹாரி தலைமையில் இடம்பெற்றது.
இந்நேர்முகத் தேர்வில் 45 பாடசாலைகள் பங்கேற்றிருந்த அதே வேளை 30 பாடசாலைகள் மாத்திரமே “வித்ய ஒளி" கௌரவிப்புக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தன.
இதில் நிகழ்ச்;;சி இணைப்பாளரான அமைப்பின் அங்கத்தவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான எப். பெரீஸ் முஹம்மட் இன் ஏற்பாட்டில்> நடுவர்களாக சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல். றியாஸ்> சம்மாந்துறை கோட்டக் கல்வி அலுவலகத்தின் இணைப்பாளர் இஸட்.எம். றிஸ்வி> எம்.ரீ. றிபாயிஸ் ஆசிரியர் ஆகியோர் கடமையாற்றினர்.
மேலும் இறுதி நாள் நிகழ்வில்> தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கான கௌரவிப்பும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

