(S.சஜீத்)
மே 01 உலக தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி முச்சக்கர வண்டிச்சாரதிகள் நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் தொழிளாலர்களுக்கு தோள் கொடுக்கும் தருணம் இது.. என்னும் தோணிப் பொருளை முன்வைத்து இன்று 01.05.2016) காலை 09.30 மணியளவில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்பாக இருந்து ஊர்வள நிகழ்வு ஆரம்பம் செய்யப்பட்டன.
இவ் ஊர்வல நிகழ்வின் பொது மாகாண சபை உறுப்பினர் பொறியளாளர். சிப்லி பாறூக் அவர்களும், பொறியளாளர். அப்துர் றஹ்மான் (NFGG) தவிசாளர் அவர்களும் மற்றும் பல பிரமுகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஊர்வல நிகழ்வினை ஆரம்பம் செய்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.








