(S.சஜீத்)
எமது நாட்டில் தற்போது நிலவி வரும் அதிக படியான வெப்பநிலை காரணமாக முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழிப்பன்னைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, தற்போது எமது நாட்டில் வளமையை விடவும் அதிக படியான வெப்பம் காணப்படுவதன் காரணமாக நாடு முழுவதிலும் உற்பத்தி செய்யப்படும் முட்டை 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக கோழிப்பன்னைகளின் உரிமையாளர்கள் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர்கள் கூறுகையில் வருகின்ற புத்தாண்டில் மக்கள் முட்டையினைப் பயன்படுத்தி அவர்களின் உற்பத்திகளை உற்பத்தி செய்வதற்கு பல அசொகரியங்கள் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

