SLMC யின் தேசியப்பட்டியல் பஸீர் சேகுதாவூதுக்கே வழங்கப்பபட வேண்டும் - நாபீர் ஹாஜி வேண்டுகோள்

Written By avathani Media Network on Friday, March 4, 2016


(சஜா.எம்.அனைஸ்)
இலங்கை மக்கள் அனைவரினதும் உள்ளத்தில் இருக்கும் முஸ்லிம் காங்கிரசின் அடுத்த தேசிய பட்டியல் உறுப்பினர் யார் ?என்ற அந்த  கேள்விக்கு கௌரவ அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவருமான அல்ஹாஜ் ரவுப் ஹக்கீம் அவர்களின் பதில் என்னவாக இருக்கும். என்பதுதான் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் கேள்வியாக இருக்கிறது.

அந்த வகையில் அந்த  ஆசனத்தைப்பெற கௌரவ முன்னாள் அமைச்சரும் கட்சியின் தேசிய தவிசாளருமான மூத்த போராளி சகோதரர் வஸீர் சேகுதாவூத் அவர்களே பொருத்தமானவர் என்பது அதிக மக்களின் எண்ணமாக இருக்கிறது. அது தலைவருக்கும் நன்றாக தெரிந்த உண்மையே.

அண்மையில் எனது விஜயமொன்றின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் நிலையை நோக்குகின்ற போது சற்று சரிவை காணக்கூடியதாக உள்ளதும். மாற்று கட்சியை சேர்ந்த இரு முக்கிய அரசியல் பிரமுகர்களின் இருப்பையும் உற்றுநோக்கும் போது கட்சியின் வளர்ச்சிக்கு கட்டாயம் மட்டக்களப்பை தலைமையும் கட்சியும் பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. எதிர்வரும் காலங்களில் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக தனது பதவிகளை இராஜினமா செய்வதற்க்கும் தயங்காத ஒருவரான சகோதரர் பசீர் அவர்களை கௌரவப்படுத்துவதன் மூலம் சில்லறை அரசியல் வாதிகளினதும், பிரதேச தலைவரினதும், வங்கரோத்து முகவர்களின் ஆசைகளுக்கு இடம் கொடுக்காது ஒட்டுமொத்த மு.காவும் செயற்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.

ஒரு சில புல்லுருவிகளினதும், பதவியாசை பிடித்தவர்களினதும் சூழ்ச்சிகளை களைந்து கட்சியினதும் மக்களினதும் நலன்கருதி சிறந்த ஆளுமையும், அறிவும், திறமையும், பொறுமையும் கொண்ட கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்களையும் மட்டக்களப்பு மண்ணையும் கௌரவப்படுத்தி எதிர்வரும் காலங்களில் தற்போதைய தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சகோ.சல்மான் அவர்கள் இராஜினமா செய்கின்ற போது அந்த ஆசனத்தை வழங்க வேண்டும் என கௌரவ அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவருமான சகோ.ரௌப் ஹக்கீம் அவர்களிடம் வேண்டிக்கொள்கிறேன் என நாபீர் பௌண்டசன் தலைவர் அல்ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.