அன்புப் பொதுமக்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்..
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்..)
நமது பிரதேசத்தில் வெளியூர்களிலிருந்து வந்து தங்கி கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமுள்ளன.
இவ்வாறு வெளியிடங்களிலிருந் வந்து தங்கி இருப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சேமநலன்களைக் கருத்திற்கொண்டு வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க சம்மேளனம் உத்தேசித்துள்ளது.
எனவே, வெளியூர்களிளிருந்து வந்து தங் கல்வி பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் எதிர்வரும் 20.03.2016 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் பெயர் விபரங்களை சம்மேளன காரியாலயத்தில் பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஜஸாகல்லாஹ்..
மேற்படி இவ் அறிவித்தல் காத்தான்குடியில் உள்ள அனைத்து பள்ளிவாயல்களிளும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...


