(நேஷன்)
மொம்மலாட்ட கலைஞர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி ' உலக பொம்மலாட்டம் தினம்' ஆக யுனெஸ்கோ நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கையில் முதல் முறையாக உலக மொம்மலாட்ட தினம் 2005 ஆம் ஆண்டு நடைபெற்றது.
அன்று தொடக்கம் வருடந்தோரும் உலக மொம்மலாட்ட தின கொண்டாட்டம் விமர்சையாக நடைபெற்றதுடன், இம்முறை உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள '2016 உலக பொம்மலாட்டம் தின கொண்டாட்டம்' 2016 மார்ச மாதம் 21 ஆம் திகதி மு.ப. 10.00 மணிக்கு கொழும்பு-07, நெளும்பொக்குண கலையரங்கில் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பீ. நாவின்ன அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இம்முறை உலக பொம்மலாட்டம் தினத்தின்போது தேசிய மொம்மலாட்டம் பற்றிய விசேட சொற்பொழிவு மற்று விசேட மொம்மலாட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

