புதிய கட்சி வருமா…? திரை மறைவில் நடப்பது என்ன…?

Written By We Are Anonymous on Sunday, February 21, 2016



கருத்­தொ­ரு­மை­வாத தேசிய அர­சாங்கம் பத­வி­யேற்று குறு­கிய காலத்­துக்­குள்­ளேயே எதிர்க்­கட்­சியின் பாரிய விமர்­ச­னத்­துக்கு உள்­ளா­கி­வ­ரு­கின்­றது. இங்கே எதிர்க்­கட்சி என நாம் பாரா­ளு­மன்­றத்தில் உள்ள உத்­தி­யோ­க­பூர்வ எதிர்க்­கட்­சியை குறிப்­பி­ட­வில்லை.

மாறாக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி என தம்மை அறி­வித்­துக்­கொண்­டுள்ள மஹிந்த அணி­யி­னரின் அரச எதிர்ப்பு விமர்­ச­னங்­க­ளையே சுட்­டிக்­காட்­டு­கின்றோம். இவ்­வா­றான நகர்­வு­க­ளுக்கு மத்­தி­யி­லேயே தற்­போது புதிய அர­சியல் கட்சி ஒன்று தேவை என்ற கருத்தை ஒரு­சா­ராரும் அவ்­வாறு புதிய அர­சியல் கட்சி ஒன்று அவ­சியம் இல்லை என்று மற்­றொரு சாராரும் அடிக்­கடி கூறி­வ­ரு­வதை காண முடி­கின்­றது.

புதிய அர­சியல் கட்சி வருமா வராதா என்­பதே தற்­போ­ தைய நிலை­மையில் அர­சியல் சூடான விட­ய­மாக மாறி­யுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான கருத்­தொ­ரு­மை­வாத தேசிய அர­சாங்கம் பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­து­ வ­ரு­கின்ற நிலையில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­து­வ­ரு­கின்­றனர்.

இந­நி­லையில் தினமும் மாறி மாறி குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டு­வ­ரு­வதை காண்­கின்றோம். நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் உள்­ளக விசா­ரணை பொறி­முறை விவ­காரம் உள்­ளிட்ட அனைத்து செயற்­பா­டு­களும் மஹிந்த அணி­யி­னரின் விமர்­ச­னங்­க­ளுக்கு உட்­பட்­டு­வ­ரு­கின்­றது.

அடிக்­கடி செய்­தி­யாளர் மாநா­டு­களை நடத்­தி­வ­ரு­கின்ற மஹிந்த அணி­யினர் அர­சாங்­கத்தின் மீது பாரிய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­து­ வ­ரு­கின்­றனர். குறிப்­பாக அர­சாங்கம் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­ற­வில்லை என்றும் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு அர­சாங்­கத்­திடம் ஆக்­க­பூர்­வ­மான திட்­டங்கள் இல்லை என்றும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் குற்றம் சாட்­டி­வ­ரு­கின்­றனர்.

அது மட்­டு­மன்றி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தின் மீதும் ஐக்­கிய தேசிய கட்­சியின் மீதும் பாரிய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­து­வ­ரு­கின்றார். குறிப்­பாக தனது குடும்பம் அர­சியல் பழிவாங்­க­லுக்கு உட்­பட்­டு­வ­ரு­வ­தாக அவர் அடிக்­கடி குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­து­வ­ரு­கின்றார்.

மேலும் மக்கள் கஷ்­டங்­களை எதிர்­நோக்­கி­வ­ரு­வ­தா­கவும் எனவே புதிய அர­சியல் கட்சி ஒன்றின் தேவையை நாட்டு மக்கள் உணர்ந்­துள்­ள­தா­கவும் மஹிந்த ராஜ­பக் ஷ கூறி­வ­ரு­கின்றார்.

இந்­நி­லை­யி­லேயே புதிய அர­சியல் கட்­சியை உரு­வாக்­க­வேண்டும் என்ற விடயம் தற்­போது நாட்டில் சர்ச்­சைக்­கு­ரிய விட­ய­மாக மாறி­யுள்­ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கூறி­யி­ருப்­ப­தா­வது “”ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியில் இருந்து நான் வெளி­யே­றப்­போ­வ­தா­கவும் புதிய கூட்­ட­ணியை உரு­வாக்­கப்­போ­வ­தா­கவும் கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

ஆனால் நான் இது­வ­ரையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருந்து வெளி­யேறி தனிக்­கூட்­டணி அமைக்­கப்­போ­வ­தாக தெரி­விக்­க­வில்லை. நான் இப்­போதும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்­கா­ர­னா­கவே செயற்­பட்டு வரு­கின்றேன்.

ஆனால் இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருக்கும் சிலரே என்னை கட்­சியை விட்டு வெளி­யே­று­மாறு வற்­பு­றுத்தி வரு­கின்­றனர்.

யார் என்ன செய்­தாலும் நான் கட்­சியை விட்டு வெளி­யே­றப்­போ­வ­தில்லை”” இவ்­வாறு மஹிந்த ராஜ­பக் ஷ திட்­ட­வட்­ட­மாக கூறி­யி­ருக்­கின்றார்.

ஆனால் இவர் இவ்­வாறு கூறு­கின்றார் என்­ப­தற்­காக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் புதிய அர­சியல் கட்சி ஒன்றை ஆரம்­பிப்­ப­தற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுக்­க­வில்லை என்று கூறி­விட முடி­யாது.

மஹிந்த அணி­யினர் அடிக்­கடி தாங்கள் தனிக்­கட்சி ஒன்றை ஆரம்­பித்து செயற்­ப­டப்­போ­வ­தாக கூறி­வ­ரு­கின்­றனர். அதா­வது புதிய அர­சியல் கட்சி ஒன்றை ஆரம்­பிப்­ப­தற்­கான தீவிர பேச்­சக்­களில் ஈடு­பட்ட மஹிந்த தரப்­பினர் தற்­போது அந்த விட­ய­த்தில் சற்று பின்­ன­டைந்து இருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கின்­றது.

கருத்­தொ­ரு­மை­வாத தேசிய அர­சாங்­கத்தின் சில அதி­ரடி நட­வ­டிக்கைகள் இவ்­வாறு ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் புதிய கட்­சியை அமைப்­ப­தற்­கான முயற்­சியில் குறிப்­பி­டத்­தக்க தளர்வு ஏற்­படக் கார­ண­மாக அமைந்­தி­ருக்­கலாம்.

இந்­நி­லையில் சுதந்­திரக் கட்­சியில் தற்­போ­தைய நிலை­மையில் இரண்டு பிரி­வுகள் ஏற்­பட்­டுள்­ளன என்­ப­தனை யாரும் மறுக்க முடி­யாது. மஹிந்த அணி­யினர் –மைத்­திரி அணி­யினர் என இரண்டு தரப்­பினர் இருக்­கின்­றனர் என்­பதே உண்­மை­யாகும். இந்­நி­லையில் மைத்திரி அணியில் இருக்கும் அமைச்சர் சரத் அமு­னு­கம இந்த புதிய கட்சி விவ­காரம் தொடர்பில் இவ்­வாறு கூறு­கிறார்.

“” இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இரண்­டாக பிரியும் என்ற கதை­களை கூறி கட்­சிக்குள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த சிலர் நினைக்­கின்­றனர். ஆனால் இன்று கட்சி இரண்­டாகப் பிரிய வேண்டும் என கூறும் எவரும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் அல்ல.

ஒரு சிலர் கட்­சிக்குள் இன்று இன­வாதக் கருத்­து­களை பரப்பி தமது இருப்பை தக்­க­வைக்க முயற்­சிக்­கின்­றனர். எனவே இவர்­களை நம்பி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் எவரும் இல்லை. எமது கட்சி எப்­போதும் தலை­மைத்­து­வத்­தினை ஏற்று அதற்கு கட்­டுப்­பட்டு செயற்­படும் கட்­சி­யா­கவே இருந்து வரு­கின்­றது.

அவ்­வாறு இருக்­கையில் புதிய கூட்­டணி உரு­வாக்கும் எவ­ரையும் நம்பி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்­கா­ரர்கள் எவரும் கள­மி­றங்கப் போவ­தில்லை. இன்று தனிக்­கட்சி அமைத்து ஆட்­சியை கைப்­பற்­று­வ­தாக கூறும் எவரும் தைரியம் இல்­லாத நபர்கள்.

கோழி­யைப்­போல கொக்­க­ரித்­துக்­கொண்டு காலத்தை கடத்தும் நபர்­களே இவர்கள். தனித்து பய­ணிக்க விரும்­பு­கின்­ற­வர்கள் தமக்கு தைரியம் இருக்­கு­மானால் இந்த நேரம் தனிக்­கட்சி அமைத்­தி­ருக்க வேண்டும். ஆனால் அவ்­வாறு இல்­லாது முட்­டை­யிடும் கோழி­யைப்­போல கொக்­க­ரித்­து­கொண்டு இருப்­பது வெறும் வேஷம் என்றே கூற­வேண்டும். இந்த அச்­சு­றுத்­தல்­களை கண்டு நாம் அஞ்­சப்­போ­வ­தில்லை.

தனித்து போக விரும்பும் எவரும் கட்­சியை விட்டு வெளி­யேற அனு­மதி உண்டு”” இவ்­வாறு மிகவும் கார­சா­ர­மான முறையில் இந்த தனிக்­கட்சி விவ­காரம் தொடர்பில் அமைச்சர் சரத் அமு­னு­கம கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருக்­கின்றார்.

மேலும் தான் கடந்த காலங்­களில் கடந்த அர­சாங்­க­த்தில் இருந்­த­தை­யிட்டு வெட்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இந்­நி­லையில் தற்­போ­தைய நிலை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இரண்­டாக பிரியும் பட்­சத்தில் அதா­வது மஹிந்த அணி­யினர் தனிக்­கட்­சியை ஆரம்­பிக்கும் பட்­சத்தில் அதனால் ஐக்­கிய தேசிய கட்­சிக்கே அதிக நன்மை கிடைக்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கூட மஹிந்த ராஜ­பக் ஷ தரப்­பி­னரும் மைத்­திரி தரப்­பி­னரும் இணைந்து போட்­டி­யிட்­டதன் கார­ண­மா­கவே 95 ஆச­னங்கள் என்ற அள­வுக்கு சென்­றனர்.

இத­னால்தான் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்­சி­ சாதா­ரண பெரும்­பான்­மை­யைக்­கூட பெற முடி­ய­வில்லை. ஆட்­சி­ய­மைக்க 113 ஆச­னங்கள் தேவைப்­பட்­டி­ருந்த நிலையில் ஐக்­கிய தேசிய கட்­சி­ 106 ஆச­னங்­க­ளையே பெற்­றுக்­கொண்­டது.

ஒரு­வேளை மஹிந்த தரப்­பினர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து தனித்து வேறொரு கட்­சியில் போட்­டி­யிட்­டி­ருந்தால் அதனால் ஐக்­கிய தேசிய கட்­சிக்கே அதிக நன்மை கிடைத்­தி­ருக்கும்.

விசே­ட­மாக கூறப்­போனால் ஐக்­கிய தேசிய கட்சி பெரும்­பான்மை பலத்­துடன் ஆட்­சி­ய­மைத்­தி­ருக்கும் என்­பதே யதார்த்­த­மாகும். இந்­நி­லையில் தற்­போது கூட ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் என தம்மை அறி­வித்­துக்­கொண்­டுள்ள மஹிந்த அணி­யினர் தனிக்­கட்சி அதா­வது புதிய கட்­சியை அமைத்து தனித்து செயற்­பட்டால் அதன் நன்­மைகள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கே வந்து சேரும்.

இதனை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அறிந்து வைத்­தி­ருப்பார். எனினும் இது தொடர்பில் எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் அடுத்­த­கட்­டத்தில் நடை­பெறும் என்­பதே கேள்­விக்­கு­றி­யாக உள்­ளன.

குறிப்­பாக பிவித்­துரு ஹெல உறு­மய கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பி­லவும் இந்த தனிக்­கட்சி ஆரம்­பிக்கும் செயற்­பாட்டில் தீவி­ர­மாக இருக்­கின்றார்.

அடிக்­கடி செய்­தி­யாளர் சந்­திப்­புக்­க­ளிலும் உதய கம்­பன்­பில தமது அணி தனிக்­கட்­சியை ஆரம்­பித்து தனித்து செயற்­படும் என்ற விட­யத்தை கூறி வரு­கிறார். இந் நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் மைத்­திரி தரப்­பினர் தொடர்ச்­சி­யாக உதய கம்­பன்­பி­லவை விமர்­சித்து வரு­கின்­றனர்.

அத­ாவது ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை இரண்­டாக பிரித்து பிள­வு ­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிப்­ப­தாக உதய கம்­பன்­பில எம்.பி. மீது குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி வரு­கின்­றனர்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே புதிய கட்சி உரு­வா­குமா அல்­லது வெறும் வாய்ச்­ச­வடால் மட்­டுமே வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதா என்­பது குறித்து கேள்­விகள் எழு­கின்­றன.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை பொறுத்தவரை பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் அவ­ருக்கு இன்னும் குறிப்­பி­டத்­தக்க செல்­வாக்கு உள்­ளது என்­பதை யாரும் மறுக்க முடி­யாது.

எனினும் எதிர்­வரும் நாட்களில் அர­சியல் நகர்­வு­களும் அர­சியல் நிலை­மை­களும் எவ்­வாறு அமையும் என்­பதை எதிர்வு கூற முடி­யாது. அவ்­வாறு எதிர்­வு ­கூ­றப்­பட முடி­யாத அர­சியல் நிலை­மைகள் யாருக்கு சாத­க­மாக அமையும் என்றும் கூற முடி­யாது.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியி­லி­ருந்து பிரிந்து மஹிந்த ராஜ­பக் ஷ தனிக்­கட்சி அமைப்­பா­ரெனின் அர­சியல் ரீதியில் அவர் எடுக்கும் மிகப் பெரிய மற்றும் தீர்க்­க­மான தீர்­மா­ன­மாக அது அமையும். ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அவ்­வா­றான தீர்­மா­னத்தை எடுப்­பாரா என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும்.

எவ்­வா­றான முறையில் தனிக் கட்­சியை ஆரம்­பித்­தாலும் எதிர்­வரும் தேர்­தல்­களில் எவ்­வா­றான முடி­வு­களை எடுத்து செயற்­பட்­டாலும் அனைத்து தரப்­பி­னரும் ஒரு முக்­கி­ய­மான விட­யத்தை மனதில் கொள்ள வேண்டும்.

அதா­வது நாட்டில் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யிலும், இனங்­க­ளுக்­கி­டை­யிலும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி புரை­யோடிப் போயி­ருக்­கின்ற தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்­றை­காண்­ப­தற்கு தற்­போது சிறந்­த­தொரு சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது.

அந்த அரு­மை­யான சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண அனை­வரும் தமது ஒத்­து­ழைப்பை வழங்­கு­வ­தற்கு முன்­வர வேண்டும். தற்­போது தனிக்­கட்­சியோ அல்­லது புதிய கட்­சியை ஆரம்­பிக்க போவ­தா­கவோ கூறு­ப­வர்கள் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும், நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வை காண்­ப­தற்கும் கிடைத்­துள்ள சந்­தர்ப்­பத்தை உரிய முறையில் பயன்­ப­டுத்­து­வ­தற்கு ஆக்­க­பூர்­வ­மான ஒத்­து­ழைப்பை வழங்­க­வேண்டும்.

தனித்து செயற்­ப­டு­கின்றோம் என்ற போர்­வையில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளுக்கும், நிரந்­தர தீர்வை காண்­ப­தற்­கான முயற்­சி­க­ளுக்கும் இடை­யூறு ஏற்­படும் வகையில் செயற்­பட்டு விடக்­கூ­டாது.

தற்­போது இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்­ளன. எனவே இதன்­மூலம் புரை­யோடிப் போய் கிடக்­கின்ற நீண்­ட­காலப் பிரச்­சி­னை­ க­ளுக்கு நிரந்­த­ர­மான மற்றும் நீடித்து நிக்க கூடி­ய­து­மான தீர்­வு­களை காண்­ப­தற்கு சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது.

இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் பிர­தான கட்­சி­களில் ஒன்­றான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்தி புதிய கட்­சியை ஆரம்­பித்து செயற்­பட முற்­ப­டு­வ­தா­னது நல்­லி­ணக்­கத்­தையும் தீர்வு முயற்­சி­க­ளையும் பாதித்­து­விடும் அபா­யத்தை கொண்­டுள்­ளது.

எது எவ்­வாறு இருப்­பினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தமது அணி­யி­ன­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­வ­தற்­காக தனி அர­சியல் கட்சி என்ற எண்ணக்கருவிற்கு செல்வதற்கான சாத்தியமே காணப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அண்மைக் காலங்களில் தெரிவித்து வரும் காரணங்களைப் பொறுத்து அவர் புதிய கட்சியை நோக்கி பயணிப்பார் என்ற விடயம் அரசியல் உலகில் தெ ளிவானதாகவே உள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக் ஷ புதிய கட்சியை தொடங்குவது குறித்து தாம் இன்னும் சிந்திக்கவில்லை என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு நான் ஒருபோதும் விலக மாட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

எவ்வாறிருப்பினும் புதிய கட்சியை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்திருந்தாலும் கூட தான் அவ்வாறு செய்வேன் என மஹிந்த ராஜபக் ஷ ஊடகங்களிடம் கூறுவார் என நாம் எதிர்பார்க்க முடியாது.

விசேடமாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பின்தள்ளிப் போகும் பட்சத்தில் மஹிந்த தரப்பினரின் புதிய கட்சிகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் தாமதமடையும் நிலைமை காணப்படுகின்றது.

கருத்தொருமைவாத அரசாங்கமும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருடம் வரை தள்ளிப் போடுவதற்கு நாட்டம் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. எனவே எதிர்வரும் காலங்களில் அரசியல் களம் மிகவும் சூடுபிடித்ததாகவே அமையும் என எதிர்பார்க்கலாம். கட்சிகள் எடுக்கப் போகும் தீர்மானங்கள் மற்றும் அதிரடி அரசியல் நகர்வுகள் என்பவற்றினூடாக அரசியல் களம் சூடு பிடிக்கும் என்பதே யதார்த்தம் ஆகும்.

–ரொபட் அன்டனி–
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.