(அஸ்லம் எஸ்.மௌலானா)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரு வருட பூர்த்தியை முன்னிட்டு சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் களஞ்சியசாலை வளவில் விசேட நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
சங்கத்தின் இயக்குனர் சபைத் தலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இயக்குனர் சபை உறுப்பினர்களான ஏ.எல்.ஏ.றசீட், ஏ.எம்.ஜஹான், ஏ.எல்.அஹமட்லெப்பை, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எம்.சம்சுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

