கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கெல்லைக்குற்பட்ட மையிழந்தனை கிராம மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் வேண்டுகோளுக்கிணங்க கட்டார் சரிட்டி நிருவனத்தின் நிதியுதவியில் ஐ.எஸ்.ஆர்.சி நிறுவனத்தினால் பொதுக்கிணறு அமைத்து பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் ஐ.எஸ்.ஆர்.சி நிறுவன திட்ட இணைப்பாளர், ஓட்டமாவடி பிரதேச சபையின் அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

