=========================
எனதிரு பள்ளிவாயல்களின்
தொழும் தரைகளில் மையித்துக்களை சரித்து
ஹவுளுகளை இரத்தத்தை ஊற்றி நிரப்பிவிட்டு
தப்பியோடியவர்களை துரத்தி எழுதுகிறேன்!
*
அழ்ழாஹ் ஒருவனைத் தவிர
வேறெதுவுமே நினைவுக்கு வராத
சுஜூதின் தியான மகிமை மீது
வனப் பன்றிகளின் குணத்தை
அள்ளிக் கொண்டுவந்து கொட்டி
இன வெறியாடியவர்களின்
மிருக உருவான முகங்களை நான் சரியாகக் கண்டேன்!
*
103 தொழுகையாளிகளின் புத்தம் புனித உயிர்களை
துப்பாக்கிக் குழல் வைத்து
பதறக் கதற உறிஞ்சிக் குடித்து
குருதித் தாகம் ஆற்றிய மனித வெறிப் புலிகளின்
காட்டு முகவரியை காட்டித்தர
துணிவிருக்கிறது எனக்கு!
*
இரவுச் சாப்பாடு சமைத்துண்பதற்காக
சுட்டுக் கொன்று
மனித சதைகளை
குதறி வேட்டையாடிய போராளி(?)களின்
கொலை வீரத்தை
காத்தான்குடிப் பள்ளிவாயல்களின்
கிப்லாத் திசை சுவர்கள்
சல்லடைகளாக சுவடு வரைந்து வைத்திருக்கிறன!
*
அரை மணிக்கும் குறைவான நேரத்தில்
ஐம்பத்தியெட்டு விதவைகளை
ஒரே குறிச்சியில் மாத்திரம் உண்டாக்கிய
புலிகளின் உலக மகா கொடுமையை
எனது ஊரின் "இத்தா" வீடுகள்
வாசல் கதவோரம் தாங்கி நிற்கின்ற
வரலாற்றுச் சோகம்!
*
தொழுகை பழகிக் கற்கும் ஆன்மீக ஆர்வத்தில்
மீரா ஜும்ஆ , ஹுசைனியா மஸ்ஜித்களுக்குச் சென்ற
பாலகச் சிறுவர்கள் பதினைந்து பேர்
இரத்தத்தில் மிதந்த
நெஞ்சுடைந்த அகோரத்தை நிகழ்த்திவிட்டு
ஓடியொளித்த ஆயுத அரக்கர்களின்
மண் மூட்டைப் பதுங்கு குழிகளை தேடிச் சென்று
குண்டு வீசிச் சிதறவைப்பதற்கு
தேவையான கோபம் எனது சட்டைப் பைக்குள் இருக்கிறது!
*
அழகியவிரு இறை இல்லங்களிலும்
அழுகுரல் கண்ணீர் நிரம்பி வழிந்தோடி
முழு ஊருமே மூழ்கிப் புதைந்து போன பெருந்துயர்!
சிவப்பாய் இருட்டுப்பட்டது காத்தான்குடியின் இவ்விரவு!
*
எனது சாந்த இயல்பை
இரத்தத்தால் அடுப்பு மூட்டி கொலைகளால் கொதிக்க வைத்த
நரபலியர்களுக்கு எச்சரித்துச் சொல்லுகிறேன்!
ஐந்து நேர அவ்வல் ஜமாஅத் போன்று
ஆயுதப் பயிற்சிக்குப் போய் வருவதும்
ஆறாவது அவசியமாக ஆகிவிட்டது எந்தனூர் பொடியன்களுக்கு!
04-08-1990
எனதிரு பள்ளிவாயல்களின்
தொழும் தரைகளில் மையித்துக்களை சரித்து
ஹவுளுகளை இரத்தத்தை ஊற்றி நிரப்பிவிட்டு
தப்பியோடியவர்களை துரத்தி எழுதுகிறேன்!
*
அழ்ழாஹ் ஒருவனைத் தவிர
வேறெதுவுமே நினைவுக்கு வராத
சுஜூதின் தியான மகிமை மீது
வனப் பன்றிகளின் குணத்தை
அள்ளிக் கொண்டுவந்து கொட்டி
இன வெறியாடியவர்களின்
மிருக உருவான முகங்களை நான் சரியாகக் கண்டேன்!
*
103 தொழுகையாளிகளின் புத்தம் புனித உயிர்களை
துப்பாக்கிக் குழல் வைத்து
பதறக் கதற உறிஞ்சிக் குடித்து
குருதித் தாகம் ஆற்றிய மனித வெறிப் புலிகளின்
காட்டு முகவரியை காட்டித்தர
துணிவிருக்கிறது எனக்கு!
*
இரவுச் சாப்பாடு சமைத்துண்பதற்காக
சுட்டுக் கொன்று
மனித சதைகளை
குதறி வேட்டையாடிய போராளி(?)களின்
கொலை வீரத்தை
காத்தான்குடிப் பள்ளிவாயல்களின்
கிப்லாத் திசை சுவர்கள்
சல்லடைகளாக சுவடு வரைந்து வைத்திருக்கிறன!
*
அரை மணிக்கும் குறைவான நேரத்தில்
ஐம்பத்தியெட்டு விதவைகளை
ஒரே குறிச்சியில் மாத்திரம் உண்டாக்கிய
புலிகளின் உலக மகா கொடுமையை
எனது ஊரின் "இத்தா" வீடுகள்
வாசல் கதவோரம் தாங்கி நிற்கின்ற
வரலாற்றுச் சோகம்!
*
தொழுகை பழகிக் கற்கும் ஆன்மீக ஆர்வத்தில்
மீரா ஜும்ஆ , ஹுசைனியா மஸ்ஜித்களுக்குச் சென்ற
பாலகச் சிறுவர்கள் பதினைந்து பேர்
இரத்தத்தில் மிதந்த
நெஞ்சுடைந்த அகோரத்தை நிகழ்த்திவிட்டு
ஓடியொளித்த ஆயுத அரக்கர்களின்
மண் மூட்டைப் பதுங்கு குழிகளை தேடிச் சென்று
குண்டு வீசிச் சிதறவைப்பதற்கு
தேவையான கோபம் எனது சட்டைப் பைக்குள் இருக்கிறது!
*
அழகியவிரு இறை இல்லங்களிலும்
அழுகுரல் கண்ணீர் நிரம்பி வழிந்தோடி
முழு ஊருமே மூழ்கிப் புதைந்து போன பெருந்துயர்!
சிவப்பாய் இருட்டுப்பட்டது காத்தான்குடியின் இவ்விரவு!
*
எனது சாந்த இயல்பை
இரத்தத்தால் அடுப்பு மூட்டி கொலைகளால் கொதிக்க வைத்த
நரபலியர்களுக்கு எச்சரித்துச் சொல்லுகிறேன்!
ஐந்து நேர அவ்வல் ஜமாஅத் போன்று
ஆயுதப் பயிற்சிக்குப் போய் வருவதும்
ஆறாவது அவசியமாக ஆகிவிட்டது எந்தனூர் பொடியன்களுக்கு!
04-08-1990

