அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான உரை முஸ்லிம் சமுக நலன் விரும்பிகளுக்கு அழைப்பு

Written By avathani Media Network on Wednesday, July 27, 2016

(ஏ.எல்.ஆஸாத் - சட்டக்கல்லூரி)

அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நாளை மறுதினம் வியாழக்கிழமை (28) அக்கரைப்பற்று TFC ஹொட்டலில் நடைபெறவுள்ளது.

மாலை 04 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான முக்கிய விடயங்கள் பேசப்படவுள்ளன.

இக்கூட்டத்திற்கு முக்கிய அதிதிகளாக சட்டத்தரணி மர்சூம் மௌலானா, பேராசிரியர் அமீர் அலி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீன் ஆகியோர் பங்கு கொள்ளவுள்ளனர்.

நாளை நடைபெறவுள்ள இந்நிகழ்வு முகநூல்கள் மற்றும் முஸ்லிம் இணையத்தளங்கள் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கான ஊடக அனுசரணை சிலோன் முஸ்லிம் www.ceylonmuslim.com இணையத்தளம் வழங்குகின்றது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.