தேசிய கால்ப்பந்தாட்டப் போட்டியில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை சாதனை.

Written By avathani Media Network on Sunday, July 17, 2016


(எம்.ரி.எம்.யூனுஸ்)

தேசிய கால்பந்தாட்ட சம்மேளத்தினால் தேசிய ரீதியில் திணைக்களங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்டப் போட்டியில் சீ பிரிவில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச்சபை அணி வெற்றியீட்டி வெற்றிக் கிண்ணத்தினையும் சான்றிதழையும் தனகாக்கிக் கொண்டது.

நாவலப்பிட்டி ஜெயதிலக மைதானத்தில் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை வங்கி அணியினரை எதிர்த்தாடிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச்சபை அணி 0-1 என்ற கணக்கில் வெற்றியை தனதாக்கி கொண்டது.
தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை

தேசியகால்ப்பந்தாட்ட அணியில் பெரும்பாலான வீரர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.