உப ஜனாதிபதி : நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும்.!

Written By avathani Media Network on Sunday, June 5, 2016


சிறுபான்மை மக்களின் சார்பில் உப ஜனாதிபதியை நியமிக்கவேண்டும் எனும் கருத்திற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிப்பது நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் பலமான தீர்மானமாக அமையும். இதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கக்கூடாது என மஹிந்த ஆதரவு அணி தெரிவித்துள்ளது. 

இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை மற்றும் சிறுபான்மை மக்களின் சார்பில் உப ஜனாதிபதி என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹெகலிய ரம்புக்வெலவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.