உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குவது சீனப் பெருஞ்சுவர் இந்த சுவரின் கட்டுமானப் பணி கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது.
இதையடுத்து, 1368 முதல் 1644 வரையிலான காலகட்டத்தில் சுமார் 6,300 கிலோ மீற்றர் தூரத்துக்கு சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்டது.
சீனாவின் ஷாங்காய்குவானிலிருந்து ஜியாயுகுவான் வரை நீண்டுள்ளது இந்த சுவர் நீண்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு Panjiakou நீர்தேக்கத்தில் சீன பெருஞ்சுவரின் ஓர் பகுதி மூழ்கியது, கடும் வரட்சி நிலவி வருவதால், அந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது, இதன் காரணமாக மூழ்கியிருந்த சீன பெருஞ்சுவரின் ஒரு பகுதி மீண்டும் தோன்றியுள்ளது.

