வகவத்தின் 28வது பௌணர்மி கவியரங்கு எதிர்வரும் 19.06.2016 அன்று ஞாயிறு காலை 10.30 மணிக்கு கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரியில் அருட்கவி யுவன் அவர்களின் அரங்காக நடைபெறும்.
கவிஞர் கனிவுமதி தலைமையில் நடைபெறும் இக்கவியரங்கில் வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.எம்.எம்.முஷ்ர்ரப் சிறப்பதிதியாக கலந்துக் கொண்டு அருட்கவி யுவன் அவர்களைப் பற்றிய சிறப்புரை ஆற்றுவார்.
கவிதை பாட விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 அல்லது செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 உடன் அல்லது தேசிய அமைப்பாளர் கலாவிஸ்வநாதன் 0776576728 உடன் தொடர்பு கொள்ளவும். கவிதைகள் 4 நிமிடங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும்

