வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு ஏற்பாடுகள் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும் - தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ

Written By avathani Media Network on Tuesday, May 17, 2016


(ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)

கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்காக உணவு சமைத்துக் கொடுக்கும் பணியில் தவ்ஹீத் ஜமாஅத் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு முன் உணவு சமைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, கொழும்பில் பாதிக்கப்பட்டு தங்க இடமின்றி தவிக்கும் சகோதரர்கள் ஜமாஅத்தின் தலைமையகத்தில் தாரளமாக தங்கிக் கொள்ளலாம் என்றும் ஜமாஅத் அறிவித்துள்ளது. - ஆண் பெண் இரு பாலாருக்கும் தனித் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவிக்கும் சகோதரர்கள் ஜமாஅத்தை தொடர்பு கொண்டார் அவர்களுக்குறிய உணவு ஏற்பாடுகள் செய்யப்படும் - தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கம் 0774781479 (சகோதரர் முயீன்)


















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.