வவுனியா - இரட்டைபெரியகுளம் பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த 42 வயதான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் கொலை செய்ததாக கூறப்படும் பெண் இரட்டைபெரிய குளம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

