காத்தான்குடியில் டெங்கு பரிசோதனை இன்று முதல் ஆரம்பம்..

Written By avathani Media Network on Tuesday, March 29, 2016


(ஜுனைட்.எம்.பஹ்த்)

தற்காலத்தில் டெங்கு நோய்ப்பரவல் அதிகரித்திருப்பதால் காத்தான்குடி சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 29.03.2016 இன்று தொடக்கம் 01.04.2016 ம்திகதி வரை டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சுகாதார பரிசோதகர்கள் தலைமையில் 15 குழுக்க
ள் 
 பிரிக்கப்பட்டு மேற்படி பரிசோதனை இடம்பெறும் இக் குழுக்களில் காவல் துறையினர் மற்றும் சுகாதார தொண்டர்களும் இணைந்துள்ளனர்.

பொதுமக்கள் தங்களது வீட்டுச்சூழல் மற்றும் வெளிச்சூழல்களை டெங்கு நுளம்பு உருவாகாத வகையில் சுத்தமாக வைத்துக்கொள்வதுடன் டெங்கு நோய் தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் பரிசோதனைக்காக வரும் அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் U.L.M.நஸ்ரூத்தீன் கேட்டுக் கொண்டார்..
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.