(எம்.ரி.எம்.யூனுஸ்)
கவிஞர் கிண்ணியா ஏ.கே.முஜாரத் எழுதிய "சாத்தான் வழிந்தோடும் சொற்கள்" கவிதை நூல் வெளியீட்டு விழாவும் கெளரவிப்பு நிகழ்வும் எறும்புகள் பதிப்பகத்தினூடாக இன்று ஞாயிற்றுக்கிழமை 27.03.2016 கிண்ணியா பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சிரேஸ்ட சட்டத்தரணி ஆறுமுகம் ஜெக ஜோதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் MS.தெளபீக் கலந்து கொண்டார்.
நூலின் முதற்பிரதியை சமூகசேவகர் AM.நியாஸ் பெற்றுக்கொண்டதுடன் இலக்கியவாதிகள் பலருக்கு கெளரவிப்பும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.



