
காத்தான்குடி ப.மு.நி. சம்மேளனத்தின் கல்விக்குழு வழமை போன்று இவ்வருடமும் சாதனையாளர்கள் பாராட்டு நிகழ்ச்சியினை நடாத்த தீர்மானித்துள்ளது. சம்மேளன நிருவாக பரப்பில் வசிக்கும், பின்வரும் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர்.
2015/16 ம் ஆண்டுகளில்
1.கலாநிதி பட்டம்
2.இலங்கை அரசின் கல்வி, பொது நிருவாக சேவை, கணக்காளர் சேவை, கடல்கடந்த சேவை, கணக்காய்வாளர் சேவை போன்ற போட்டி பரீட்சைகளில் சித்தியடைந்தோர்
3.தேசிய மட்டத்தில் சாதனை புரந்தோர்
4.க.போ.த உயர்தரத்தில் பல்கலை கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டோர்.
5.க.பொ.த.சாதாரண தரத்தில் 9A, 8A, சித்தி பெற்றோர்.
6.5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடையந்தோர்.
7.அரச திணைக்களங்களினால் நடாத்தப்படும் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வெற்றி அடைந்தோர்கள்.
மேற்படி தகுதிகள் உடையோர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் விழாவில் கௌரவிக்க பட உள்ளனர்.
மேற்படி தகமைகள் உடையோர் செயலாளர், கல்வி அபிவிருத்திச் சபை, பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி. எனும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கவும்.
இதில் சாதனை புரிந்த மாணவர்கள், அப்பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.
தொடர்புகளுக்கு:
0777112821
