மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் ஆரம்பித்துவைத்த வீதிக்கு ஒருநாள் என்ற தொனிப்பொருளில் மக்கள் குறைகளை அவர்கள் இல்லம் நாடி சென்று கேட்டறிகின்ற நடமாடும் நிகழ்சித்திட்ட நிகழ்வின் ஐந்தாவது வெற்றிகரமான மக்கள் குறைகேள் சேவை புதிய காத்தான்குடி றிஸ்வி நகரில் மிக அண்மையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அப்பிரதேச மக்களது சில குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டதுடன், மீனவர்களது தேவைகளை இனங்கண்டு அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
