(S.சஜீத்)
பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி கடற்கரை திடலில் (செரன்டிப்) முஸ்தபா அவர்களின் நாடக குழுவைக் கொண்டு சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று (19.02.2016) இன்று ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் போது எமது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் தொடர்பான துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர்களின் பாடசாலை கல்வி குறைபாடு அகிய விடயங்களை கருத்திற் கொண்டு "சிறுவர்களுக்கான பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குதல்" எனும் தோணிப் பொருளை முன்வைத்து. இவ் தெரு நாடக நிகழ்வு மிக சிறப்பான முறையில் ஒழுங்குகமைக்கப்பட்டு இவ் நிகழ்வின்போது பலரின் மத்தியிலும் அரங்கேரின.
ஆகவே இவ் நாடகத்தின் மூலம் பெற்றோர்கள் மத்தியில் காணப்படும் சிறுவர்களின் நாலாந்த செயல்களின் கவணக் குறைபாட்டினால் ஏற்படும் ஆபத்தான தாற்பரியம் பற்றியும் அவர்களின் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் மிகவும் சிறப்பான முறையில் நாடகக் குழுவினர்கள் நடித்துக் காட்டினார்கள்.









