இலங்கையில் இரத்தானானத்தில் முதல் நிலை வகிக்கும் அமைப்பான ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நேகம கிளை 7வது முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபொரும் இரத்த தான நிகழ்வு இன்று (22.01.2017) காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை நேகம முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அனுராதாதபுரம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினரின் அனுசரணையுடன் இடம்பெற்ற இவ் இரத்ததான நிகழ்வில் 15 பெண்கள் அடங்கலாக 69 பேர் இரத்த தானம் செய்து தமது பங்களிப்பினை வழங்கிவைத்தனர்.
(அஸீம் கிலாப்தீன்)





