வலம்புரி கவிதா வட்டத்தின் 32 வது பௌர்ணமி கவியரங்கு (14.11.2016)

Written By avathani Media Network on Monday, November 7, 2016


வலம்புரி கவிதா வட்டத்தின் 32 வது பௌர்ணமி கவியரங்கு 14.11.2016 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு 12 அல்ஹிக்மா கல்லூரியில் பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசன் அரங்காக நடைபெறும். கம்மல்துறை இக்பால் தலைமையில் நடைபெறும் இக்கவியரங்கில் மூத்த எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு, பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசன் அவர்களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார்.


கவிதை பாட விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 அல்லது செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 உடன் அல்லது கவிஞர் ஈழகணேஷ் 0717563646 உடன் தொடர்பு கொள்ளவும். கவிதைகள் கட்டாயமாக 4 நிமிடங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.







Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.