காத்த மண்ணுக்கு தீன் ஒளி வீச வந்த முத்து..
தான் பிறக்கா இம் மண்ணை உயிராய் மதித்த மா மனிதர்..
உடன் பிறவா
இம் மக்களின் உள்ளத்தில் குடியமர்ந்த உன்னத மணிதர்...
படைத்தவனின் வசனங்களை மணித உள்ளத்தில் புகுத்தி பல நூறு ஹாபிழ்களை உருவாக்கிய இறை சேவகர்...
நீதி, நேர்மை, சமாதானம், ஒழுக்கம் என்பவற்றின் உதாரண புருஷர்..
எங்கள் உயிரில் கலந்த சங்கைக்குரிய " ஷைஹுல் பலாஹ் " அப்துல்லாஹ் றஹ்மானி (பெரிய ஹஸ்ரத்)
இறை அழைப்பை ஏற்று மீளா பயணம் நீங்கள் சென்றாலும் எந்நாளும் மீளும் உங்கள் நினைவுகள் எங்கள் உள்ளத்தில்..
-ஜுனைட்.எம்.பஹ்த்-
காத்தான்குடி.

