மஹகரம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் 2017 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளல்

Written By avathani Media Network on Sunday, October 30, 2016

சமூக சன்மார்க்கப் பணியில் 85 வருடங்கள் சேவை செய்யும் முன்னணிமிக்க கலாபீடமான மஹகரம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் 2017 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணம் கோரப்பட்டுள்ளது. 

ஷரிஆப் பிரிவுக்கு 15 வயதுக்கு உட்பட்ட தற்போது பாடசாலையில் 8 ஆம் ஆண்டு கற்றுக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். அல் குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்து இருக்க வேண்டும். தமிழ் மொழி சரளமாகத் தெரிந்து இருக்க வேண்டும்.

ஹிப்ழ் பிரிவுக்கு 12 வயதுக்கு உட்பட் தற்போது பாடசாலையில் 5 ஆம் ஆண்டு கற்றுக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். அல் குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருக்க வேண்டும். 

இரு பிரிவுகளுக்கும் பொதுக் கல்வி போதிக்கப்படும். க. பொ. த. சாதாரண தரம், உயர் தரம் பரீட்சை மற்றும் அல் ஆலிம் , அஹதிய்யா ஆகிய அரசாங்கப் பரீட்சைகளுக்கும் தயார்ப்படுத்தப்படுவர். குணனி மற்றும் உயர்கல்வி வழிகாட்டல்கள் வழங்கப்படும்.

விண்ணப்ப முடிவுத் திகதி 18-11-2016 ஆகும் நேர்முகப் பரீட்சை டிசம்பர் 04 ஆம் திகதி மு. ப 9.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறும் 

மேலதிக விபரங்களுக்கு பணிப்பாளர் கபூரிய்யா அரபுக் கல்லூரி, பாமுனுவ வீதி, மஹரகம என்ற முகவரியுடனும், 0777104393, 0772907803 ஆகிய கையடக்கத் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

இக்பால் அலி
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.