வாழைச்சேனையில் இடம்பெற்ற 150வது பொலிஸ் தின விழா (படங்கள்)

Written By We Are Anonymous on Monday, September 5, 2016



அனா.
03.09.2016ம் திகதி பொலிஸ் தினைக்களத்தின் 150வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் வழிகாட்டலில் நாடலாவிய ரீதியில் பொலிஸாரினால் பல்வேரு நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருகின்றன.

இதன் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விஷேட அணிவகுப்பு நிகழ்வு பொலிஸ் நிலையத்தல் இன்று இடம் பெற்றது.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஓ.எஸ்.விதானஹே கலந்து கொண்டு பொலிஸ் கொடியை ஏற்றி வைத்ததுடன் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதுடன் பொலிஸ் திணைக்களத்தின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பொலிஸ் திணைக்களத்தின் வரலாறு தொடர்பாக உரையாற்றினார்.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.