யால தேசிய சரணாலயத்தின் ஒரு பகுதி மூடப்படுகிறது.!

Written By avathani Media Network on Wednesday, August 31, 2016


யால தேசிய விலங்குகள் சரணாலயத்தின் ஒரு பகுதி நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வனவிலங்குகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் உள்ளக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதோடு, விலங்குகள் வேறு பிரதேசங்களுக்குச் செல்வதை தடுப்பதற்காக மின்வேலிகளும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.