இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தில் ரமழானை முன்னிட்டு ஆன்மீக செயலமர்வு.

Written By avathani Media Network on Monday, June 6, 2016


(எம்.ரி.எம்.யூனுஸ்)

இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தஃவா மற்றும் வழிகாட்டல் பிரிவினூடாக இஸ்லாமிய முன்மாதிப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கான ஒருநாள் ஆன்மீக செயலமர்வு ரமழானை பாதுகாப்போம் எனும் தலைப்பில் இன்று 05.06.2016 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய பள்ளிவாயளில் இடம்பெற்றது.

இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலையின் ஆண்கள் பிரிவு அதிபர் அஷ்ஷெய்க் ஹஸனலி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் அலியார் றியாழி செயலாளர் அஷ்ஷெய்க் ஜாபிர் நளீமி ஆகியோர் அதிதியாக கலந்து கொண்டனர்.

செயலமர்மை உதவி பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் அன்ஸார் நளீமி மற்றும் அஷ்ஷெய்க் ஹாதி நளீமி பைஸால் நளீமி ஆகியோர் நடாத்தினர்.






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.