ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை இவ்வருட இறுதிக்குள் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை மீண்டும் பெற்றுககொள்வதற்காக அரசாங்கம் தமது பணிகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார போக்குகள் தொடர்பில் அலரிமாளிகையில் இன்று (16) இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

