(எம்.ரி.எம்.யூனுஸ்)
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிக்கண்டல் பாலத்தருகில் பொலித்தீன் பையினால் சுற்றப்பட்ட ஆண் சிசுவின் சடலம் இன்று 08.05.2016 ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
மூன்று நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை இதுவெனவும் பிறந்த அன்றே குழந்தை பொலித்தீன் பையில் சுற்றப்பட்டு இறந்துள்ளது என மரணவிசாரனை அதிகாரியும் பொலிசாரும் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





