மஹிந்தவுக்கு ஆதரவாக பிக்குகள் : சத்தியாக்கிரக போராட்டத்தில்

Written By avathani Media Network on Sunday, May 8, 2016


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நீக்கப்பட்ட இராணுவ பாதுகாப்பை மீளவும் பெற்றுக் கொடுக்குமாறு கோரி பிக்குகளை ஒன்று திரட்டி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி காலி தர்மபால பூங்காவில் முன்னெடுக்கவுள்ளதாக சமித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலி கச்சிவத்த விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.