(S.சஜீத்)
தற்போது காத்தான்குடி தள வைத்தியசாலையில் இரத்த வங்கி ஆரம்பித்ததை முன்னிட்டும் வைத்தியசாலையில் தற்போது காணப்படும் இரத்தப் பாற்றாக்குறையை நிவரத்தி செய்யும் நோக்குடனும் காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஓர் அங்கமாக காணப்படும் (சமூக சேவைப்பிரிவி)ன் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு மே முதலாம் திகதி இன்று காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றன.
இவ் மனித நேயம் பேணும் மகத்தான பணிக்கு பலரும் கலந்து கொண்டு அவர்களது இரத்தத்தினை தானமாக வழங்கிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் அல்லாஹ் அவனுடைய திருமறையில் கூறுவதாவது, எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (அல்குர்ஆன். 5:32








