ஆலயங்களில் விலங்குகள் பலியிட தடை

Written By avathani Media Network on Saturday, April 2, 2016


யாழ் ஆலயங்களில் விலங்குகள் பலியிட்டு பூஜைகள் நடத்த இடைக்காலத் தடையுத்தரவு விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அகில இலங்கை சைவ மகாசபையால் ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் பூஜைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போதே யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை நேற்று விடுத்துள்ளார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.