(S.சஜீத்)
றாபிதது அஹ்லிஸ் ஸூன்னா, மட்டக்களப்பு பிராந்திய கிளையின் ஏற்பாட்டில், ஏறாவூர் மர்கஸுல் இஸ்லாமியில் (22.04.2016) நேற்றைய தினம் இடம்பெற்ற மாபெரும் ஈமானிய எழுச்சி மாநாட்டில் பல இடங்களில் இருந்து வருகை தந்து பெருந்திரலான மக்களைக் கொண்டு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன.
இம் மாநாட்டின் போது பின்வரும் தலைப்புக்களில் ஈமானிய எழுச்சியூட்டும் உரைகள் இடம் பெற்றன...
01.ஈமான் கொண்டவர்களே! ஈமான் கொள்ளுங்கள்.
02.இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் நவீன சவால்கள்.
03.ஊடகங்கள் ஒழுக்கத்திற்கு ஒரு சவால்.
04.பொருளீட்டலில் இஸ்லாமிய வழிகாட்டல்.
05.சுமகால அரபுலகு : ஒரு சமநிலைப் பார்வை.
தஃவா கலத்தில் நீண்ட காலமாக பல தஃவா பணிகளைச் செய்து வரும் தாயிகளே கலந்து கொண்டு இம் மார்க்கச் சொற்பொழிவை ஆற்றினர்.










