அமைச்சர் ரிசாத் பதியூதீன் மீண்டும் வில்பத்து வனப்பகுதியில் கிராமங்கள் அமைக்கும் நோக்கில் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று கொழும்பில் பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
போகஸ்வௌ கிராமத்தின் பகுதிகள் வட மாகாணத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பிறகு பிரதேச செயலாளர் பலவற்றுக்கு பிரித்து வழங்கப்பட்டதை போன்ற நிலைமை முல்லைத்தீவு மாவட்டத்திலும் நிலவுதாக மாகல்கந்தே சுதத்த தேரர் கூறினார்.

