நேற்று(13.03.2016) இரவு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் இடம்பெற்ற
தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டை பார்வையிடுவதற்கு இன்று மாலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்கள் திடீர் விஜயம் ஒன்றை
மேற்கொண்டார்.
தீயினால் சேதமடைந்த வீடு மற்றும் பொருட்களை பார்வையிட்ட மாகாண
சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்கள் பதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன்
அனர்த்தம் தொடர்பாக கலந்துரையாடி ஆறுதலளிததுடன் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு
தொகை பணத்தையும் நிவாரணமாக வழங்கினார்.
