மரத்தின் மாப்பிள்ளை

Written By avathani Media Network on Sunday, March 6, 2016



-எம்.எல்.எம்.அன்ஸார் 
மரங்கள் கல்யாணம் பண்ண 

விரும்புகிற மாப்பிள்ளை 

மழை!

*

ஒரு ஃபோன் கூட பண்ணாமல் 

இன்று நடுச் சாமம் திடீரென 

வாசலில் வந்து நின்றது மழை!

*

நீண்ட நாட்களின் பின் 

சந்தித்த சந்தோசத்தில் 

மழையும் மரமும் 

விடிய விடிய கண் விழித்து

மெதுவாகவும் சத்தமாகவும் பேசிக்கொண்டிருந்ததில் 

நானும் குளிர்ந்து போனேன்!

*

ராவு முழுக்க 

மரம் தின்று குடிப்பதற்கு 

நிறையவே சாமான்கள் 

கொண்டு வந்து கொடுத்திருந்தது மழை!

அதை மிச்சம் வைத்திருந்து 

ஒரு வாரத்திற்கும் மேல் உபயோகப் படுத்திக் கொள்ளும் 

மரம்!

*

நான் எதற்கு 

இன்று காலை அவசரப் பட்டு 

தேநீர் பருக்கிவிட வேண்டும் மரத்திற்கு?

03-01-2016

-எம்.எல்.எம்.அன்ஸார் 

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.