(எம்.ரி.எம்.யூனுஸ்)
இலங்கையில் நான்கு வலய பிரிவுகளின் படி மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய, அங்கு சென்றிருந்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம்
பிரிவு A காலை 07.00 - 12.30 மற்றும் மாலை 06.00 - 08.00
பிரிவு B காலை 07.00 - 12.30 மற்றும் மாலை 06.00 - 08.00
பிரிவு C பகல் 12.30 - 06.00 மற்றும் இரவு 08.00 - 10.00
பிரிவு D பகல் 12.30 - 06.00 மற்றும் இரவு 08.00 - 10.00

