கல்முனை இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த டிப்பர் கனரக வாகானமொன்று காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றிற்குள் புகுந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது..
இச் சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி நகரசபை செயலாளர் சர்வேஸ்வரன் மற்றும் காத்தான்குடி போலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்..
இவ் விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்..






