மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோருக்கு விஷேட சலுகை.

Written By avathani Media Network on Tuesday, March 29, 2016


(எம்.ரி.எம்.யூனுஸ்)

நாட்டில் வரட்சியான காலநிலை தென்படுவதால் மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் சலுகைகளை வழங்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

முதல் மாதக் கட்டணத்தை விடவும் அடுத்த மாதம் 10 சதவீதம் குறைவாகப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கே, விசேட சலுகையை வழங்க மின்சார சபை தீர்மாணித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற வரட்சியான காலநிலை, இன்னும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்குச் சாத்தியம் தென்படுகின்றன என்று தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபை, மின்சாரத்தைச் சேமிக்கும் வகையிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துகின்ற தனியார் நிறுவனம் உள்ளிட்ட பிரிவினருக்கு, ஊக்கத்தொகையொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.