அந்த காதலன் காதலியைக் கொன்று விட்டு என்னத்தை சாதித்து விட்டார் அவருடைய வாழ்கையை ஜெயிலில் முடியப்போகுது காதலியின் இறுதி முடிவு கல்லறையில் முடியும் இதில் யாருக்கு என்ன இலாபம் ?
பலர் காதலிக்கின்றார்கள் காதலின் புனிதம் புரியாமல் இடை நடுவில் பிரிந்து விடுகிறார்கள்.
இன்றைய தலைமுறையினரிடம் திருமணத்திற்கு முன்பே உடலுறவில் ஈடுபடும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.
இதில் கசப்பான உண்மை என்னவெனில், இவர்களில் பெரும்பாலானோர் அவர்களையே திருமணம் செய்துக் கொள்வதில்லை.
காதலிக்கும் போதே கருத்து வேறுபாடு நேர்ந்து பிரிந்துவிடுகிறார்கள்.
இப்படித்தான் இன்றைய காதல் காலின் புனிதம் அழிந்து விட்டது மாறாக அது அனாகரீகமான முறையில் விஸ்வரூபம் எடுத்துள்ளதை யாரும் மறுக்க முடியாது இதற்குக் காரணம் பிள்ளைகள் மட்டுமல்ல பெற்றாராகிய நாமும் என்பதை யாரும் மறுதலிக்க முடியாது சிலர் இதற்கு வியாக்கியானம் கூறலாம் முதலில் உடன் உங்கள் வீட்டை புலன் விசாரனை செய்யுங்கள் அதைவிட்டு விட்டு என் பிள்ளை நல்ல பிள்ளை அது அப்படி அல்ல இப்படியல்ல என கூறிவிட்டு நாளை ஒன்று நடந்து விட்டால் எதுவும் செய்ய முடியாமல் திண்டாடுவதை விட்டு விட்டு உடன் முடிய வேண்டிய காரியத்தை பாருங்கள் அல்லது இன்று இந்தியா நாளை எம் வீடு விநை்து செயற்படுங்கள்.

