எதிர்வரும் 28.02.2016 அன்று காலை பத்து மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் துரைவின் 85 வது விழாவும், துரைவி நினைவுப் பேருரையும், துரை நினைவுப் பேருரைகளின் தொகுப்புநூல் வெளியீட்டு விழாவும், தெளிவத்தை ஜோசப் அவர்களின்; தலைமையில் நடைபெறும்.
இந்த விழாவுக்கான 10 வது நினைவுப் பேருரையினை ‘’பெண்மையின் கட்டமைப்பும் அதன் நீட்சியாக ஆண்மையின் அனுகூல அதிகார ஆட்சியும் - ஓh; உளவியல் நோக்கு ‘’ எனும் தலைப்பில் கலாநிதி செல்வி திருச்சந்திரன் அவா;கள் நிகழ்த்துவார்
இவ்விழாவில் வரவேற்புரை திருமதி ஜெயம் துரை விஸ்வநாதன் நிகழ்த்த, துரைவி நினைவுப் பேருரைகள் தொகுப்பு நூலுக்கான வெளியீட்டு உரையை பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான மல்லியப்புசந்தி திலகர்; அவா;கள் நிகழ்த்துவார்;. நூலின் முதற் பிரதியினை புரவலா; ஹாசிம்; ஒமர் பெற்றுக் கொள்வார். கருத்துரையினை மாத்தளை கார்த்திகேசு நிகழ்த்துவதோடு, நன்றியுரையினை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் நிகழ்த்துவார். நிகழ்ச்சிகளை மேமன்கவி தொகுத்தளிப்பார்
இந்த நிகழ்வில் 2015 ஆம் ஆண்டுக்கான துரைவி விருதுக்கான நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படுவதோடு, துரைவின் 85வது பிறந்த தினத்தினை முன்னிட்டு ‘ ஈழத்துப் பிராந்திய நாவல் இலக்கியம்’ எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் வெற்றி ஈட்டியவா;களுக்கான விருதுகளும் வழங்கப்படும்.



